பர்வதமலை கிரிவலம்



* "பர்வதமலை" தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதி சிவன் கைலாச மலையிலிருந்து இறங்கி தென் பகுதியில் நுழைந்த போது அவர் முதலில் கால் பதித்தது இங்குதான். அதற்கான தடயங்களாக இறைவனின் பாதங்கள் இங்கு இன்றும் இருக்கின்றன. 

* ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவியின் மலையின் சில பாகங்கள் இங்கும் விழுந்துள்ளதால் இதற்கு பர்வத சஞ்சீவி மலை என்று பெயர்.

* கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரமுள்ள இந்த மலையை ஏறி இறைவனை பார்ப்பது என்பது சிவன் மீது தீரா பற்றும் மற்றும் வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

* பர்வதமலை சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம் ஆகும்.

* திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் போகும் பாதையில் உள்ளது.

*  பர்வதமலையில் உள்ள குகையில் விடோபானந்தா சுவாமிகள்சுமார் 14 வருடம் கடும் மௌன தவம் புரிந்தார்.

* இந்த மலை நந்தி வடிவில் இருப்பதால் நந்தி மலை என்றும், சிங்க டிவில் இருப்பதால் சிங்க மலை என்றும் கூறுவர்.

* இங்குள்ள சக்திகளில் மிக முக்கிய மான விஷயம் என்னவென்றால் இந்த இறைவனையும் இறைவியியையும் உருவாக்கி வழிபட்டவர் சித்தர் போகர்.

* இன்றளவும் சித்தர்களும் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும் சூட்சு ரூபத்தில் வழிபடுகின்றனர்.

* நந்தியால் சுமக்கப்பட்டுள்ள இறைவனும் இறைவியும் பார்க்கும் அனைவரின் உயிரிலும் கலக்கின்றனர். அதனால்தானோ என்னவோ இந்த கோயிலில் எங்கு திரும்பினாலும் நந்தி சிலைகள்தான் காணப்படுகின்றன.

* சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம் இது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 1ம் நாள் இங்கு பல்லாயிரக்கணக்கானோர் ( சுமார் 1 லட்சத்திற்கும் மேல் ) கிரிவலம் வருகின்றனர். தன்னுடைய தோஷங்களை நீங்க சிவனை பிரார்த்தித்து கிரிவலம் வந்தால் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது என்பதால் ஒவ்வொரு வருடமும் கிரிவலம் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. 

.* காஞ்சி மகாபெரியவர் அவர்கள் மலை ஏற வந்தபோது அந்த மலையே சிவனாக காட்சிஅளித்ததால் மலையேறாமல் கிரிவலம் சென்றார்கள்.

Post a Comment

Previous Post Next Post