ஆதித்ய ஹ்ருதயம்

மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ
ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம்கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம்
செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும்
ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதே சித்த அற்புத ஸ்லோகம் இது.

இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த
ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததா லேயேராமபிரான் ராவணனை
எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியைபாராயணம் செய்தால் அத் தொல்லைகள் சூரியனைக் கண்ட
பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும்.ஆயுளை
வளர்க்கும்.ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும்
எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும்இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.

1.ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம் 
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் 
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:

ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த
அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட
ராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.

2.ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த
மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல
முடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை
உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.

3. ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை
அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும்அளவற்ற உடல் வலிமையை
தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற
ஸ்தோத்திரத்தை நீஅனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம்,
சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.

4.ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு
மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,
உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா
மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.

5.ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்
தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும்எல்லா
ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்
ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.

6. ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக
உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்தசூரியனே.

7. ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:

இவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும்
பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும்குபேரனாகவும் காலமாகவும்
யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.

8. பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர:

இந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற
தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்தமருந்துகளாகவும்
மனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும்,
பிராணனாகவும் பருவ காலங்களைஉருவாக்குபவராகவும்
ஒளி பரப்புபவராகவும் திகழ்கிறார்.

9. ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர:

இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.
கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில்சஞ்சரிப்பவர். மழையால்
உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.
பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.
பகலை சிருஷ்டித்தவர்.

10. ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான
கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ளகுதிரையை உடையவர்.
பிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர்.
உலகையே ஸம்ஹாரம்செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே
உருவானவர்.

11.ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன:

தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத,
லோப குணங்

Post a Comment

Previous Post Next Post