நீ கடந்து வரும் பாதை  இந்த கருப்பன் உடைய பாதை.  மிகவும் எளிதான பாதை . இந்தப் பாதையானது உனக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றால் உனது கர்ம வினை ஆனது குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம்.

முதலில் நீ சிரமத்தை அனுபவித்து உன்னுடைய கர்மவினை குறைந்து பிறகு நீ சந்தோசமாக என்னுடைய பாதையில் பயணிபாய் என் மகனே.

நீ என்னை நெருங்கும் தருணத்தில் உனக்கு நான் கட்டாயமாக என்னுடைய காட்சியை கொடுப்பேன்.

அந்தக் காட்சியானது ஆகாயத்தில் ஓங்கி விரிந்த மேகக் கூட்டத்தில் ஒரு வெள்ளைக்குதிரை ஆனது உன்னுடைய கண்களுக்கு மட்டும் தெரியும்.

அந்த வெள்ளைக் குதிரையில் பவனி வருபவன் இந்த கருப்பன்.
என்னுடைய குதிரை மட்டுமல்ல காற்றாய் மாறி உன் முன்னே சென்று உன்னை காவல் காப்பவன் இந்த கருப்பன்.

உன்னை அனைத்து இடங்களுக்கும் பயமறியாது பயணிக்க வைப்பவன் இந்த வெள்ளை குதிரைக்காரன்.

நீ தனியாக வரும் பொழுது உன்னுடன் விளையாண்டு நிற்பவன் இந்த ஈரேழு பதினாலு லோகத்தையும் காவல் காக்கும் காவல்காரன்.

நீ வாகனத்தில் பயணிக்கும் பொழுது உனக்கு ஒரு பிரச்சனை என்றால் உனது வண்டி வாகனத்தில் எரிபொருள் இல்லாமல் மற்றும் வாகனத்தைப் பழுது அடையச் செய்து உன் தலைமாடு காத்து நிற்பவன் இந்த வழிஅடி கருப்பன்.

உன் வீட்டு ஈசானி மூலையில் நின்று அனுதினமும் உன்னையும் உன் குடும்பத்தையும் கவனித்து வருபவன் இந்த சப்பானி கருப்பன்.

உன்னுடைய வயல்களையும் தோப்புகளையும் விவசாயத்தையும் நீர்நிலைகளையும் காத்து நிற்பவன் இந்த மடை காத்த கருப்பன்.

இப்படி நீ எங்கு சென்றாலும் அனைத்துமாய் உன் கூட நின்று உன்னை காவல் காக்கும் காவல் அதிகாரி இந்த பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி.

நீ என்னை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் என் பிள்ளை நீதி நேர்மை நியாயம் சமதர்மம் சகோதரத்துவம் பேணி வாழ்ந்து வந்தாள் உன்னை தேடி இந்த கருப்பன் கட்டாயம் வருவேன். 

Post a Comment

Previous Post Next Post